தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்

சென்னை: கொரோனா பாதிப்பில், தமிழகம் இரண்டாவது நிலையில் தான் உள்ளதாகவும், சமூக பரவலாக மாறவில்லை என சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கண்காணிப்பின் கீழ் 90,415 பேர் உள்ளனர். வீடு முடிந்து 5080 பேர் திரும்பியுள்ளனர். 3,684 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நேற்று வரை 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று 102 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில், 1,580 பேர் அனமதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டில்லி சென்றவர்கள். மற்றொருவர் அமெரிக்கா சென்று வந்துள்ளார். மற்றொருவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். டில்லி சென்று வந்தவர்களில் 303 பேருக்கு கொரோனா இல்லை.


தமிழக அரசிடம் போதுமான அளவு மாஸ்க், மருத்துவ உபகரணங்கள் உள்ளது. ஒருவருக்கு பாதிப்பு என அறிந்த உடனேயே, அனைத்து துறைகளும் இணைந்து முழு வீச்சில் செயல்படுகிறோம். பாதிப்பு அதிகரிக்க, அதிகரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில், தமிழகம் இரண்டாவது நிலையில் தான் உள்ளது. சமூக பரவலாக மாறவில்லை. இதனால், அனைவரும் சமூக விலகல், தனியாக இருத்தல் உள்ளிட்டவற்றை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட எளிதில் பாதிக்கப்பட கூடியவர்கள், கவனமுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.


Popular posts
ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்
Image
ஆனால், பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இதனால், மளிகை தொகுப்பை கையில் எடுத்து பார்க்கும் கார்டு தாரர்கள், வாங்காமல் திருப்பி தருகின்றனர். இரு வாரங்களாகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. இக்கட்டான சூழலில், துறையின் உயர் மட்டத்தினரும், அதிகாரிகளும், 'கமிஷனை' எதிர்பார்க்காமல், தரமான மளிகை பொருட்களை வாங்கி, கடைகளுக்கு அனுப்பி இருந்தால், ஏழை மக்கள் பயன் பெற்றிருப்பர்; அரசுக்கும் வருவாய் கிடைத்திருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொருட்களை வாங்கிய மக்களோ, 'ரேஷனில் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து தான், சமையல் செய்கிறோம். ஆனால், எந்தப் பொருளுமே தரமானதாக இல்லை.'இப்படி எங்களை ஏமாற்றுவதை விட, ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்.
இப்படி எங்களை ஏமாற்றுவதை விட, ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்
Image
டில்லி நேரு மைதானம் கொரோனா முகாமாக மாற்ற முடிவு?