இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் அதிகமான உயிழப்புகளை சந்தித்துள்ளன. அமெரிக்காவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர், வேலையின்மை நலன்களுக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். நாட்டில் உணவு சேவை, கடைகள், போக்குவரத்து துறை உள்ளிட்ட 50 சதவீத அத்தியாவசிமற்ற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் மேயர் பில் தி பிளாசியோ கூறும்போது, "இது ஒரு தொடக்க நிலைதான், துரதிர்ஷ்டவசமாக நிலைமை இன்னும் மோசமான நிலையை எட்டலாம்." என கூறியுள்ளார். சென்ட் சபை, 2 டிரில்லியன் டாலர் நிதியை நேற்று(மார்ச்-26) ஒதுக்க முன்வந்துள்ளது. இது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 3,400 டாலர் ரொக்கமாக வழங்கப்படும்.
இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கடந்த வாரத்தில் நோய் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இத்தொற்று நோய்க்கு விரைவாக மருந்து கண்டுபிடித்தாலும் கூட, உலகளவில் குறைந்தது 18 லட்சம் மக்கள், உயிரிழப்பு ஏற்படும் என பிரிட்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஆய்வு தெரிவித்துள்ளது.
கொரோனாவை ஒழிக்க ஜி20 நாடுகள் 5 டிரில்லியன் நிதி